வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பிய விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் இன்று சோதனை நடத்தினார்கள்.
சிறுவர்-சிறுமிகளை உடலுறவில் ஈடுபட வைத்து அதை வீடியோவாக படம் பிடித்து இணையதளம் மற்றும் சி.டி.க்கள் மூலம் விற்பனை செய்யும் கும்பல்கள் உலகின் சில நாடுகளில் இயங்கி வருகின்றன.
பல நாடுகளில் இதுபோன்ற வீடியோக்களை தடை செய்துள்ளன. இருப்பினும் நல்ல விலை கிடைப்பதால் மிகவும் ரகசியமாக இதுபோன்ற வக்கிரமான காட்சிகள் சிலர் மூலம் தங்குதடையின்றி பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பகிரப்படுவது தொடர்பாக டெல்லி, காசியாபாத், ஃபரிதாபாத், மேற்குவங்கம், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த வினோத் கண்ணன், கோஷிமா ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் சிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய கேரளாவை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.