Advertisment

‘காலை, மதியம் உணவு அளிப்பேன், தயவு செய்து படியுங்கள்’- காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து ஸ்டாலின் பேச்சு

ஒரு நூற்றாண்டுக்கு முன், மதிய உணவுத் திட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த தமிழகத்தின் அதேபோன்ற முதல் திட்டம், ஆரம்ப கட்டத்தில், மொத்தம் 33.56 கோடி ரூபாய் செலவில் சுமார் 1.14 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm mk stalin launch free breakfast scheme, free breakfast scheme,

ஒரு நூற்றாண்டுக்கு முன், மதிய உணவுத் திட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த தமிழகத்தின் அதேபோன்ற முதல் திட்டம், ஆரம்ப கட்டத்தில், மொத்தம் 33.56 கோடி ரூபாய் செலவில் சுமார் 1.14 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர். பள்ளிகளில் கல்வியுடன் சத்துணவு அளிப்பது அரசுக்கு செலவு அல்ல, அரசின் கடமை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாநிலம் அளவிலான இலவச காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் முதற்கட்டமாகத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1922 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகராட்சி மேயரும் நீதிக்கட்சி தலைவருமான பிட்டி தியாகராய செட்டியாரால் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்று ஸ்டாலின் கூறினார்.

“ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதன் மூலம் நாங்கள் அதை நிறைவு செய்கிறோம். அமெரிக்காவின் விவசாயத் துறை மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இத்தகைய திட்டங்களைக் கொண்டுள்ளன. ஆய்வுகளின்படி, காலை உணவை வழங்கும் பள்ளிகள் அதிக மாணவர்களைப் பெறுகின்றன. கோவிட்க்குப் பிந்தைய காலத்தில் பள்ளிகளில் காலை உணவின் முக்கியத்துவம் கணிசமாக வளர்ந்துள்ளது” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

“பள்ளிகளில் குழந்தைகள் காலை உணவைப் பெறும்போது அவர்களின் கண்களில் மகிழ்ச்சியை என்னால் பார்க்க முடிகிறது” என்று மு.க. ஸ்டாலின் மதுரை பள்ளியில் குழந்தைகளுடன் காலை உணவு உண்ட பிறகு தனது உரையில் கூறினார்.

மாணவர்களுக்கு உணவு அளிக்கும்போது ஸ்டாலின், “யாருக்கும் கல்வி வாய்ப்புகளை யாருக்கும் மறுக்கக் கூடாது” என்று கூறினார்.

“ஒரு வர்க்கம் அல்லது சாதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதும் அதே திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

பள்ளிகளில் கல்வி மற்றும் உணவு இரண்டையும் வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி அவர் முதலில் கூறினார். பின்னர், 1922ல், மேயர் தியாகராய செட்டியார் சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். ஆங்கிலேயர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால், பின்னர், முன்னால் முதல்வர் காமராஜர் 1956-இல் பல மாவட்டங்களில் அதை மீண்டும் தொடங்கினார்.” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் நாங்கள் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினோம். 1970களின் முற்பகுதியில், முதல்வர் மு. கருணாநிதி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதேபோன்ற திட்டத்தைச் சேர்க்கும் வகையில் விரிவுபடுத்தினார். அப்போது, ​​குழந்தைகளுக்கு ‘பேபி ரொட்டி’ என்று ஒன்று பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, ​​நிதியுதவியை அதிகரித்து, மாநிலங்கள் முழுவதும் விரிவுபடுத்தினார்.

1989ம் ஆண்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் கலைஞர் கருணாநிதி முட்டையையும் சேர்த்து வழங்கினார் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

“ஆரம்பத்தில், வாரத்திற்கு ஒரு முட்டை, பின்னர் வாரத்திற்கு இரண்டு முட்டைகள். 2007 ஆம் ஆண்டில், அவர் வாரத்திற்கு மூன்று முட்டைகளின் எண்ணிக்கையை உயர்த்தினார். மதிய உணவு திட்டத்தில் அதிக சத்தான பொருட்களை சேர்த்தார். 2010 ஆம் ஆண்டில், அவர் வாரத்தில் ஐந்து நாட்களும் முட்டைகள் வழங்க வேண்டும் என்றார். முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது” என்று மு.க. ஸ்டாலின் கூறினார். மறைந்த ஜெ. ஜெயலலிதாவும் பல்வேறு வகையான அரிசிகளைச் சேர்த்து திட்டத்தை மேம்படுத்தினார்.

சமீபத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது கிடைத்த கருத்துக்களால் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

“சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றபோது, ​​காலை உணவை அரிதாகவே சாப்பிடுவதாக மாணவர்கள் சொன்னார்கள். அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்களும் அதை உறுதி செய்தனர். அப்போதுதான், மாணவர்கள் யாரும் வெறும் வயிற்றில் வகுப்புக்கு செல்லக் கூடாது. காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டேன்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மேலும் கூறுகையில், ஒரு மாணவருக்கு காலை உணவளிக்க அரசுக்கு ரூ.12.75 செலவாகும். அதை அரசாங்கத்திற்கு செலவு என்பதைவிட அரசாங்கத்தின் கடமையாகப் பார்க்கிறோம். நான் அதை விரிவுபடுத்தி மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல விரும்புகிறேன்… இது இலவசம், தொண்டு அல்லது ஊக்குவிப்பு அல்ல, ஏனெனில் இது அரசாங்கத்தின் பொறுப்பு. நம் குழந்தைகளுக்கு சரியான உணவு அளித்தால், அவர்கள் சிறந்த முறையில் வகுப்புகள் மற்றும் பாடங்களில் கலந்துகொள்ள முடியும். கலைஞரின் மகன் ஆட்சி செய்யும் அரசு கருணையின் உருவகமாக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

மேலும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பது போல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

“அன்புக் குழந்தைகளே நாங்கள் காலையிலும் மதியத்திலும் உங்களுக்கு உணவு வழங்குவோம். தயவு செய்து எந்த கவலையும் இல்லாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள்.” என்று கூறிய ஸ்டாலின், கல்வி என்பது உரிமை, அதை மாணவர்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது என்று கூறினார்.

“நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன், நீங்கள் உங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், அதுவே நமது தமிழ் சமுதாயத்தை பெருமைப்படுத்தும்” என்று ஸ்டாலின் கூறினார்.

உப்மா, கிச்சடி, பொங்கல், ரவா கேசரி அல்லது சேமியா கேசரி போன்ற பல்வேறு வகையான காலை உணவுகளை உள்ளடக்கும் வகையில், காலை உணவு திட்டத்தில் தினசரி மெனுவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மதிய உணவுத் திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு வரப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் பல மாநிலங்களால் முன்மாதிரியான திட்டமாக கொண்டுவரப்பட்டது. அதே போன்ற திட்டமான காலை உணவு திட்டத்டில், ஆரம்ப கட்டத்தில் சுமார் 1.14 லட்சம் குழந்தைகள் பயனடைவாகள். அதற்காக, மொத்தம் ரூ. 33.56 கோடி செலவாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Cm Mk Stalin Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment