Advertisment

அதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான் : முதல்வர் பழனிசாமி

அதிமுக தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி, இங்கு எல்லாருமே தலைவர்கள் தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu, chiefminister, palanichamy, salem, admk, dmk, complaint, முதல்வர், பழனிசாமி, சேலம், அதிமுக, உட்பூசல், தலைமை, திமுக, குற்றச்சாட்டு

tamilnadu, chiefminister, palanichamy, salem, admk, dmk, complaint, முதல்வர், பழனிசாமி, சேலம், அதிமுக, உட்பூசல், தலைமை, திமுக, குற்றச்சாட்டு

அதிமுக தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி, இங்கு எல்லாருமே தலைவர்கள் தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டத்தில் ரூ.1.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார் . பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது, தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேவையில்லாத இடத்தில் பாலங்கள் கட்டப்பட்டு வருவதாக திமுக எம்.பி. குற்றம்சாட்டியிருந்த நிலையில், மக்கள் வைக்கும் கோரிக்கையின்படியே பாலங்கள் கட்டப்படுவதாக அவர் கூறினார்.

அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளது என்பது தவறான கருத்து, அதிமுக பலம் பொருந்திய கட்சி ; அதிமுக, தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. ராஜன் செல்லப்பா பேசியது குறித்த முழு விவரங்களை பார்த்த பிறகே பதிலளிக்க முடியும் என்று கூறினார்.

திமுக மீது குற்றச்சாட்டு : மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு விழாவில் திமுகவினர் பங்கேற்கவில்லை. குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாலம் திறப்பு விழாவில் திமுகவினர் பங்கேற்றதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment