Advertisment

மகன் உடலைப் பார்த்து கதறி அழுத ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: ஸ்டாலின்- உதயநிதி நேரில் ஆறுதல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
மகன் உடலைப் பார்த்து கதறி அழுத ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: ஸ்டாலின்- உதயநிதி நேரில் ஆறுதல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா. இவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். இந்த செய்தியால், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மனமுடைந்து போனார். பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மகனின் பிரிவால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடைந்து அழுந்து கொண்டே இருந்தார்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment