Advertisment

பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்: காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சைக்கு ஸ்டாலின் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவிகளை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்: காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சைக்கு ஸ்டாலின் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவிகளை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இவ்விபத்தில் 15 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

கொத்தாக உயிர் பலி: தஞ்சை தேர் விபத்து நடந்தது எப்படி?

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று அந்தச் செய்திக்குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment