Advertisment

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம்.. இதுவரை 301 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தல்!

161 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள சொத்துக்களுக்கு பலர் உரிமை கோரியுள்ளதால், வருவாய்த் துறையினர் 1920 முதல்’ பதிவுத் துறையிடம் இருந்து தடை சான்றிதழின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Akasa flights 60 Off on Air Ticket Booking

ரூ.1500இல் கொச்சி-பெங்களூரு விமான பயணம் சாத்தியமாகும்.

கோவையில் விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்காக இதுவரை 301 ஏக்கர் பட்டா நிலத்தை வருவாய்த்துறையினர் 1,229 கோடி ரூபாய் செலவில் கையகப்படுத்தியுள்ளனர்.

Advertisment

மீதமுள்ள 161 ஏக்கர் பட்டா நிலத்தையும் 4 மாதங்களில் கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நிலம் கையகப்படுத்துதல் முடிந்ததும், இந்திய விமான நிலைய ஆணையம் நிலத்தை கையகப்படுத்தி, பணிகளைத் தொடங்கும்.

விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக 627.89 ஏக்கர் நிலம், 134.2 ஏக்கர் பாதுகாப்பு நிலம், 31.69 பொறம்போக்கு நிலம்  மற்றும் 462 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நிலப் பகுதிகள் 24 தொகுதிகளில் அமைந்துள்ளன, பாதுகாப்பு நிலம் தொகுதி எண் 24ல் உள்ளது. இப்பகுதியில் 634 வீடுகள் உள்ளன. வீட்டு மனைக்கு ஒரு சதுர அடிக்கு 1,500 ஆகவும், விவசாய நிலத்திற்கு ஒரு சதுர அடிக்கு 900 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுவரை, களப்பட்டி, இருகூர், சிங்காநல்லூர், நீலம்பூர், உப்பிலிபாளையம் ஆகிய கிராமங்களில், 301 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தி, நில உரிமையாளர்களுக்கு, 1,229 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளோம்.

மீதமுள்ள 161 ஏக்கர் பட்டா நிலத்துக்கு, 830 கோடி செலவாகும். மொத்த செலவான 2,059 கோடியை மாநில அரசே ஏற்கும்” என்று அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

161 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள சொத்துக்களுக்கு பலர் உரிமை கோரியுள்ளதால், வருவாய்த் துறையினர் 1920 முதல்’ பதிவுத் துறையிடம் இருந்து தடை சான்றிதழின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். நில உரிமையாளர்களை சரிபார்க்க இந்த விவரங்கள் உதவும். சரிபார்ப்பு செயல்முறை நேரம் எடுக்கும். இருப்பினும், நான்கு மாதங்களுக்குள் அதை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்திய விமான நிலைய ஆணையம் பத்தாண்டுகளுக்கு முன்பே விமான நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்து,  அதற்கான நிலத்தை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற காத்திருக்கிறது.

முன்மொழியப்பட்ட திட்டத்தில் ஓடுபாதையை 9,500 அடியில் இருந்து 12,500 அடியாக நீட்டிப்பதும், எல்&டி பைபாஸ் சாலைக்கு அருகில் புதிய முனையம் அமைப்பதும் அடங்கும் என்று அதிகாரி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment