Advertisment

பாஜக கடையடைப்பு.. பாதுகாப்பு அளிக்க வணிகர் சங்கம் கோரிக்கை மனு

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
coimbatore

Coimbatore

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் அன்று சிறுகுறு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாநகரில் கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக வரும் 31ம் தேதி கடை அடைப்பு என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடையடைப்பில் கலந்து கொள்ளாமல் கடைகளை திறந்து வைத்திருக்கும் கடைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அந்த அமைப்பினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

இதில் கடையடைப்பு வணிகர்களயும் பொதுமக்களையும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். பொது பந்த் தேவைப்படும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். தற்போது அறிவித்துள்ள பந்த்தை பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பந்தில் வணிகர் சங்கங்கள் கலந்து கொள்வதில்லை. அந்த நேரத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சந்திரசேகர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment