கோவை கார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் மீது கூடுதலாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கோவை கார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் மீது மேலும் 3 வழக்கு பதிவு:
கடந்த 1ம் தேதி, கோவை சுந்தராபுரம் பெரியார் சாலை அருகே அதிவேகமாக வந்த ஆடி சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த மக்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள், மேலும் ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். கூடுதலாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை கார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் ஜெகதீஷ்
இந்த கோர விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீஷ் மீது தற்போது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே அவர் மீது, போத்தனூர் காவல்நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 183, 184 மற்றும் 185 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று (2ம் தேதி) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கார் விபத்து குறித்த கூடுதல் செய்திக்கு:
இதனிடையே விபத்து நடந்த சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை மாலை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.