Advertisment

கோவை கார் விபத்து : ஓட்டுனர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

கோவை விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மீது கூடுதல் 3 வழக்குகள் பதிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coimbatore car accident, கோவை கார் விபத்து

கோவை கார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் ஜெகதீஷ்

கோவை கார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் மீது கூடுதலாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

கோவை கார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் மீது மேலும் 3 வழக்கு பதிவு:

கடந்த 1ம் தேதி, கோவை சுந்தராபுரம் பெரியார் சாலை அருகே அதிவேகமாக வந்த ஆடி சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த மக்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள், மேலும் ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். கூடுதலாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

coimbatore car accident, கோவை கார் விபத்து கோவை கார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் ஜெகதீஷ்

இந்த கோர விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீஷ் மீது தற்போது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே அவர் மீது, போத்தனூர் காவல்நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 183, 184 மற்றும் 185 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று (2ம் தேதி) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கார் விபத்து குறித்த கூடுதல் செய்திக்கு:

இதனிடையே விபத்து நடந்த சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை மாலை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment