Advertisment

கோவை கார் வெடிப்பு.. உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து மர்ம மூட்டை எடுத்துச் செல்லும் நபர்கள்.. சி.சி.டி.வி., காணொலி வைரல்

சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் ஜமேஷா முபின் இல்லத்தில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம மூட்டையை எடுத்து சென்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

கோவையில் கார் தீ பற்றி எரிந்து வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் அவரின் வீட்டில் இருந்து மர்ம மூட்டையை எடுத்து செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Advertisment

நேற்று அதிகாலை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.

இது தொடர்பாக டிஜிபி, ஏடிஜிபி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து ஆணிகள் கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் ஜமேஷா முபின் இல்லத்தில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம மூட்டையை எடுத்து சென்றுள்ளனர்.

இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த மூட்டை என்னவாக இருக்கும் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment