கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், என்.ஐ.ஏ பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தும் என தமிழிசை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; கோவையில் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு NIA விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும்.
இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுகிறேன். கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும். கார் வெடிக்கும் வரை எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டும். இதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையின் மீது NIA விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியது குறித்த கேள்விக்கு அரசியல் வாதியாக பதில் அளிக்க தான் விரும்பவில்லை.
எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என்று அவர் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“