Advertisment

கோவை: பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி... சிசிடிவி காட்சி!

சோமனூரில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையமானது கடந்த 1998-ம் ஆண்டு கட்டப்பட்டது. விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore-bustand CCTV Video bus stop collapse.

கோவையை அடுத்த சோமனூரில் பேருந்துநிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துநர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். சோமனூரில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையமானது கடந்த 1998-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக சோமனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்தது. பேருந்து மேற்கூரையில் மழை நீர் தேங்கி, பலவீனம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் பேருந்து நிலையத்தின் மேகூரை மொத்தமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment