Advertisment

அடுத்தடுத்து மோதிய லாரிகள்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்கள்

சூலூர் அருகே கண்டெய்னர் லாரியும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் உயிர் தப்பிய சம்பவம், ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
அடுத்தடுத்து மோதிய லாரிகள்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்கள்

சூலூர் அருகே கண்டெய்னர் லாரியும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் உயிர் தப்பிய சம்பவம், ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியில் கோவை கொச்சின் தனியார் பைபாஸ் சாலை செல்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த வழியில் பயணம் செய்து வருகிறது.

தினம்தோறும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த சாலையில் வழக்கம்போல் கனரக வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.அப்போது சேலத்தில் இருந்து கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இங்குள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் கிடங்குக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்த போது வந்த கண்டெய்னர் லாரி டேங்கர் லாரியில் மோதியது.

இதில் டேங்கர் லாரியின் பின்புறம் வந்த மற்றொரு டேங்கர் லாரியும் அடுத்தடுத்து மோதியது.இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஓட்டுநர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்பட்டது பைபாஸ் சாலை என்பதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment