கோவையில் 24ஆம் தேதி போலீஸ், பொதுமக்கள் கிரிக்கெட்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அசத்தல் முயற்சி
கோவை மாநகர காவல் துறை சார்பில் வருகிற 24 ஆம் தேதி முதல் காவல் துறை மற்றும் பொதுமக்களிடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன என்று காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அப்போது அவர், “இந்தப் போட்டியில், காவல் துறை சார்பில் 10 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. வரும் 24 முதல் 30 தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், காவல் துறை அணியினருக்கு தனியாகவும், பொதுமக்கள் அணியினருக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெறுகின்றன.
அக்டோபர் - 2ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் அணியினர் இடையேயான போட்டி நடைபெறும்.
இந்த கிரிக்கெட் போட்டிக்கான நோக்கம் காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாக்குவதே ஆகும்.
மேலும், இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, இளைஞர்கள் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது நடைபெறுகிறது” என்றார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil