மதுபோதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்; விபத்தில் ஒருவர் பலி: பதைப்பதைக்கும் சி.சி.டி.வி காட்சி

மதுபோதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய நபர் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுபோதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய நபர் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
Lor

கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் நோக்கி இன்று காலை கழிவு நீர் அகற்றும் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது புலியகுளம் விநாயகர் கோயில் அருகே சாலையில் நின்று இருந்த கார் மீது மோதியது. மேலும் சாலையில் நடந்த சென்ற  முதியவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

Advertisment

இந்த விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

பொதுமக்கள் மற்றும் போலீசார் 4 கிலோ மீட்டர் தூரம் அந்த கழிவு நீர் அகற்றும் லாரியை விரட்டிச் சென்று பிடித்தனர்.  

Advertisment
Advertisements

விசாரணையில் ஓட்டுநர் ராமநாதபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பதும் காலையிலேயே குடி போதையில் இருந்ததும் தெரியவந்தது. 

WhatsApp Image 2024-10-12 at 13.25.07

இதைத் தொடர்ந்து காட்டூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பிரவீன் குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

லாரி ஏற்படுத்திய விபத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: