விஜய்யின் சகோதரர் உதயா வீட்டின் வெளியே இருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உதயா வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்த போது, அங்கு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகேஷை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் உதயா அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விஜய் வீட்டை விட்டு வெளியே ஒடி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள விஜய்யை தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, கல்லூரி மாணவர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது என்பது போலீசாரையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.