Advertisment

இயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

தினமும் காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரனை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
director Bharathiraja, jaya tv ulley velliye

director Bharathiraja, jaya tv ulley velliye

திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டு வழக்குகளில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 12 ஆம் தேதி கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அமீருக்கு ஆதரவாக நிருபர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தேசத்திற்கு விரோதமாகவும், தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலைத்தில், 2 பிரிவுகளின் கீழ் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் போட்டிகளின் போது காவல்துறை தாக்க தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி இயக்குனர் பாரதிராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மறு உத்தரவு வரும் தினமும் காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரனை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment