Advertisment

ஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் : உயர்நீதிமன்றம் அறிவுரை

நீதிபதிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் ரத்து உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி திமுக சார்பில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளும் வெள்ளியன்று (ஜுலை 21) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். மேலும் தேர்தல் தொடர்பான கால அட்டவணையை வரும் புதன்கிழமைக்குள் ( ஜுலை 26) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment