Advertisment

கோவையில் தொடர் மழை: ராஜ வாய்க்கால் தடுப்பணை திறப்பு

கோவையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக ராஜ வாய்க்கால் தடுப்பணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
கோவையில் தொடர் மழை: ராஜ வாய்க்கால் தடுப்பணை திறப்பு

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. 16-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது.

Advertisment

இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கோவை மாநகரில் உள்ள 8 குளங்களும் நிரம்பின. இதனால் உபரி நீர் நொய்யல் ஆற்று வழியாக செங்குளம் வந்து அங்கிருந்து ராஜ வாய்க்கால் வழியாக குறிச்சி குளத்துக்கு நீர் செல்லும் தடுப்பணையும் திறந்து விடப்படுள்ளது.

publive-image

இதனால் வழக்கமான அளவை விட ராஜ வாய்க்காலில் கூடுதல் நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி, ராஜவாய்க்கால் பகுதிகளை தூர்வாரியதால் இடையூறு இன்றி நீர் வெளியேற வருகிறது.

publive-image

எப்போதும் மழை பெய்தால் ராஜ வாய்க்காலில் இருந்து நீர் திறந்து விடும் போது அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்றுவிடும். ஆனால் தற்போது சீரான முறையில் நீர் வெளியேறி வருகிறது. ராஜ வாய்காலில் நீர் திறப்பட்டதால் புட்டுவிக்கி தடுப்பணையிலும் நீர் ஆர்பரித்து ஓடுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment