Corona Virus Cases in Tamil Nadu: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண முடிகிறது. எனினும், இந்த எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம், விரைவில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று (மே 17) புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று மேலும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 558 பேர் தமிழகத்திலும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தவர்களும் அடங்கும். இதனால் மொத்த பாதிப்பு 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது. 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,172 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 61 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 13,081 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 398 பேர், பெண்கள் 241 பேர்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 61 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 3,26,720 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 13,081 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்புகளின் விவரம்,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.