Advertisment

சென்னையில் போலீஸ் எஸ்.ஐ.க்கு கொரோனா - தனிமை வார்டில் 30 போலீசார் அனுமதி

தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 பேரது மரணம் சென்னையில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, chennai, police SI, corona infection, disinfectant spray, lockdown, ,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, chennai news

corona virus, chennai, police SI, corona infection, disinfectant spray, lockdown, ,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, chennai news

சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்துவந்த 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்று பரவல் விகிதத்தில் சென்னை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஏப்ரல் 19ம் தேதிக்கு மட்டும் புதிதாக 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 285 பேருக்கு சென்னையில், கொரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு நரம்பியல் மருத்துவர் மரணமடைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 பேரது மரணம் சென்னையில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசிக்கும் 53 வயது காவல் உதவி ஆய்வாளா் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். ஊரடங்கு காரணமாக அவா் கடந்த சில நாள்களாக பாரிமுனையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக சளி, இருமல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சனிக்கிழமை இரவு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதைத் தொடா்ந்து அவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அதேவேளையில் உதவி ஆய்வாளருடன் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளா் உள்பட 30 காவலா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கிருமிநாசினி தெளிப்பு : எஸ்பிளனேடு காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Corona Virus Lockdown Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment