Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,000-ஐ தாண்டியது: டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரிப்பு

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், மாலத்தீவு நாட்டில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா(40), குஜராத்(2) , கர்நாடக (1) ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, tamil nadu, chennai, koyembedu market, coimbatore, corona free districts, erode, sivaganga, tirupur, nilgiris, dharmapuri,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

Corona Virus Cases in Tamil Nadu: தமிழகத்தில் நேற்று (மே 15) புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 10,108 ஆகவும், பலி எண்ணிக்கை 71 ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று, மட்டும் 359 பேர் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கடந்த 24 மணி கால நேரங்களில்  434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 49 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. நேற்று,  ஒரேநாளில் சென்னையில் 4 பேரும், தூத்துக்குடியில் ஒருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு - குடிமகன்களுக்கு 7 நிறங்களில் டோக்கன்

ஒரே நாளில் 11,672 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், மாலத்தீவு நாட்டில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா(40), குஜராத்(2) , கர்நாடக (1) ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக நிலவரம்:

சென்னையில் அதிகபட்சமாக 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை பெருநகரின் மொத்த எண்ணிக்கை 5,946 (ஒருவர் மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்) ஆக உயர்ந்துள்ளது.

அனைத்து அரசு அலுவலகமும் மே 18 முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் - தமிழக அரசு

சென்னைக்கு அடுத்தப்படியாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த மாவடத்தின் மொத்த எண்ணிக்கை 516 - ஆக அதிகரித்துள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment