Corona Latest TN Reports: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 266 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1,458 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 170 பேரும், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 2564 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 289 பேரும் உள்ளனர். அவர்களில் 2015 ஆண்கள், 1007 பெண்கள், ஒரு திருநங்கை உள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஓரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 170 குழந்தைகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனனர். இன்று 38 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு
மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,
அரியலூர் – 2
செங்கல்பட்டு – 1
சென்னை – 203
கோயம்புத்தூர் - 4
கடலூர் – 9
கள்ளக்குறிச்சி - 6
கன்னியாகுமரி - 1
மதுரை - 2
தென்காசி - 2
திருவள்ளூர் - 2
திருவண்ணாமலை - 1
விழுப்புரம் - 33
என மொத்தம் தமிழகத்தில் 266 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.