Corona Virus Today TN Reports: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக 3,67,430 உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 5,995 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,963 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 32 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 139 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-76) மூலமாக, இன்று மட்டும் 74,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 40 லட்சத்து 62 ஆயிரத்து 943 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,630 பேர் ஆண்கள், 2,365 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,21,753 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,45,648 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,764 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 07 ஆயிரத்து 677 ஆக உள்ளது.
எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று பரவ நான் காரணமா? – முன்னணி பாடகி விளக்கம்
இன்று மட்டும் கொரோனா பாதித்த 101 பேர் உயிரிழந்தனர். அதில், 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,340 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,413 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 17 ஆயிரத்து 484 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 03 ஆயிரத்து 051 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 46 ஆயிரத்து 895 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,282 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,22,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 430 பேருக்கும், கோவையில் 395 பேருக்கும், திருவள்ளூரில் 369 பேருக்கும், சேலத்தில் 269 பேருக்கும், கடலூரில் 242 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும், வேலூரில் 200 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில் 23 பேரும், சேலத்தில் 6 பேரும், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருவண்ணாமலை, திருநெல்வேலியில் தலா 3 பேரும், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா 2 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நீலகிரி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவரும் என 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அரசு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சியினரை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை: முதல்வர்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 866 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,492 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலூரில் 511 பேரும், செங்கல்பட்டில் 448 பேரும், தேனியில் 381 பேரும், விருதுநகரில் 351 பேரும், திருவள்ளூரில் 348 பேரும், காஞ்சிபுரத்தில் 339 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.