Advertisment

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

Chennai high court : கரூர் மாவட்ட ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும். இதுபோல் இனி நடந்துகொள்ள மாட்டேன் என கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, dmk mla, senthilbalaji, karur, collector, chennai high court, case, order, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

corona virus, lockdown, dmk mla, senthilbalaji, karur, collector, chennai high court, case, order, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

கரூர் மாவட்ட ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரொனோ ஊரடங்கினால் பொதுமக்களின், தொழிலாளர்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகளை மனுவாக பெற்று அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு திமுகவினர் அளித்து வந்தனர். அதில் செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து விட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து கரூா் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் .

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் கடந்த 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒருமுறை அமைச்சர் இரண்டு லட்சம் மக்களின் பிரதிநிதி என்ற முறையிலேயே மாவட்ட ஆட்சியரை சந்தித்ததாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. மேலும், எந்த ஒரு மிரட்டல் விடுக்கவில்லை என்றும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதை வைத்து, நான்கு நாட்கள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட வழக்கு என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வந்ததாகவும், கலெக்டர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் அதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நீர்மல்குமார், கரூர் மாவட்ட ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும். இதுபோல் இனி நடந்துகொள்ள மாட்டேன் என கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்

அடுத்த 2 வாரங்களுக்கு கரூர் மாவட்ட சிபிசிஐடி அலுவலத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும்அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி நிர்மல்குமார் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai High Court V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment