Advertisment

தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Chennai highcourt : தமிழக அரசு வருகிற 15 அல்லது 16 தேதிகளில் மத வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, religious places, temples, tamil nadu government, chennai high court, churches, mosques, reopen, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

corona virus, lockdown, religious places, temples, tamil nadu government, chennai high court, churches, mosques, reopen, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக 15 ம்தேதி பிறகு முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலில் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத மதுபான கடைகளை திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை என்பதையும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் நிதிநிலைமை பாதிக்கப்படுகிறது என்று சில நிறுவனங்களை இயக்க அனுமதித்த தமிழக அரசு, மனதளவில் பாதிக்கப்பட்டும், நிம்மதி இழந்திருக்கும் தன்னை போன்றவர்களுக்கு மத வழிபாட்டுத் தலங்களை ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு சென்று வர முடியவில்லை என்றும், முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்கு சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.கோவில்களில் ஏற்கனவே வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்வார்கள் என்றும்,சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என்றும் தெரிவித்தார். கோவிலுக்கு செல்பவர்கள் ஒழுங்கினமானவர்கள் என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், டாஸ்மாக் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளும்,கோயம்பேடு மார்க்கெட்டால் ஏற்பட்ட விளைவுகளையும் குறிப்பிட்டனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஊரடங்கும் முடிந்தபின்பு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால் தமிழக அரசு வருகிற 15 அல்லது 16 தேதிகளில் மத வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai High Court Corona Virus Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment