தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ( ஜூலை 13 ம் தேதி) ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,798ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78, 573 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,188 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை விர்ர்ர் : கொரோனாவால் இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 3,035 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு
சென்னை - 1,140
மதுரை - 464
காஞ்சிபுரம் - 352
திருவள்ளூர் - 337
செங்கல்பட்டு - 219
கன்னியாகுமரி - 185
விழுப்புரம் - 143
தேனி - 134
வேலூர் - 129
ராணிப்பேட்டை - 126
தூத்துக்குடி - 122
நெல்லை - 118
சேலம் - 101
திருச்சி - 92
திருவண்ணாமலை - 83
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,369 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 591 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 412 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 3366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 3,60,349-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.