Advertisment

கொரோனா பரவல் அதிகரிக்கும் மாவட்டங்கள் லிஸ்ட்: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3500-ஐ கடந்தது

தமிழகத்தில் உள்ள 117 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் ஒரே நாளில் 61,342 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
coronavirus

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. அதோடு ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 77 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்ரு எண்ணிக்கை, உயிரிழந்தோர் என்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 117 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 61,342 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் 23 லட்சத்து 24 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 77 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 5,723 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணடமைந்தவர்களின் மொத்த என்ணிக்கை 1,62,249 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 54,896 பேர்கள் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று சென்னை 1,138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக கொரோனா வைரஸ் தொற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் - 448 பேருக்கும், திருவள்ளூர் -474, காஞ்சிபுரம் -362, தூத்துக்குடி - 349, விருதுநகர் - 338

கோவை - 313, தேனி - 280, ராணிப்பேட்டை - 273, திருவண்ணாமலை - 267, மதுரை - 249, கன்னியாகுமரி -239, கள்ளக்குறிச்சி-238, நெல்லை-191,சேலம்-190, திருச்சி - 188, வேலூர் - 184, விழுப்புரம் - 139, திண்டுக்கல்- 133, தஞ்சை-115, தென்காசி-112, கடலூர்-109, புதுக்கோட்டை-98, திருவாரூர்-67, கிருஷ்ணகிரி-60, ராமநாதபுரம்-54, திருப்பத்தூர்-53, சிவகங்கை-48, அரியலூர்-48, திருப்பூர்-39, நீலகிரி -39, நாமக்கல் -38, தர்மபுரி - 32, ஈரோடு -27, நாகை-22, பெரம்பலூர் - 21, கரூர்-7 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முதலில் சென்னையில் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாகி வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகை குறைந்து 1,100 - 1,300 என்ற அளவில் பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Virudhunagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment