Advertisment

தமிழகத்தில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 900-ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை 911 பேர் உயிரிழந்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu coronavirus

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோரின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த சில வாரங்களாக தினமும் தொற்று எண்ணிகை ஆயிரங்களைத் தாண்டி வருகிறது. இதனால், அதிக தொற்று கண்டறியப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல, மதுரை, தேனி போன்ற மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் பழனிசாமி நேற்று, மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்ய வேண்டுமானால் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்தார்.

தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று செய்யப்பட்டுள்ளது தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று தொற்று கண்டறியப்பட்ட 3,509 பேர்களில் தமிழகத்தில் இருந்து 3,358 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 20 பேரும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 131 பேரும் அடங்குவர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,307 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 9 லட்சத்து 60 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 47 அரசு கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் 41 தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் என மொத்தம் 88 பரிசோதனை மையங்கள் உள்ளதாக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 1,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து, மதுரை மாவட்டத்தில் 203 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 172 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 170 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 140 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் 29 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை 911 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் மற்றொருபுரம் கணிசமான அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றில் இருந்து 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,064ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ள்து.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment