Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை இதுவரை 3,408

TN Corona ddaily report : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் மரணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்ளின் மொத்த எண்ணிக்கை 3,408 ஆக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu coronavirus

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் மரணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்ளின் மொத்த எண்ணிக்கை 3,408 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று என்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 64,315 மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை மொத்தம் 22,87,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிபால் 89 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,408 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 7,758 குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,51,055 பேர்கள் குனமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,537ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக

செங்கல்பட்டு -449, காஞ்சிபுரம் -442, விருதுநகர் -376,

திருவள்ளூர் -385, தூத்துக்குடி - 317, மதுரை - 301, கோவை - 270, குமரி -269, தேனி - 235, ராணிப்பேட்டை - 244, வேலூர் -212, நெல்லை-212, திருச்சி - 199, தஞ்சை-162, விழுப்புரம் -157, தி.மலை - 152, சேலம்-112, புதுக்கோட்டை-110, கள்ளக்குறிச்சி-104, திருவாரூர்-100, திண்டுக்கல்- 100, தென்காசி-99, கடலூர்-89, ராமநாதபுரம்-86, திருப்பத்தூர்-86, சிவகங்கை-84, நாமக்கல் -51, திருப்பூர்-51, நீலகிரி -40, கிருஷ்ணகிரி-31, தர்மபுரி - 30, கரூர்-27, பெரம்பலூர் - 25, ஈரோடு -22, நாகை-10, அரியலூர்-4 என கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment