தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,807 பேருக்கு கொரோனா; 88 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா பாதிப்பால் இன்று 88 பேர் பலி. மொத்த எண்ணிக்கை 2,403 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா பாதிப்பால் இன்று 88 பேர் பலி. மொத்த எண்ணிக்கை 2,403 ஆக அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,807 பேருக்கு கொரோனா; 88 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில், இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்தனர் இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோன வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளின் பலி எண்ணிக்கையும் நாள் தோறும் 50க்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தினசரி புதியதாக கண்டறியப்படும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, கொரோனா பலி எண்ணிக்கை மற்றும் பரிசோதனை புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,807 பேருக்கு கொரோனா; 88 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில், இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்தனர் இதன் மூலம் பலி எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

மாநிலத்தில் உள்ள மொத்தம் 111 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 47,179 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 18 லட்சத்து 4 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 3,049 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 49,472 ஆக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84,598 ஆக உயர்ந்துள்ளது. செனையை அடுத்து இன்று அதிகபட்சமாக, திருவள்ளூர் - 370, செங்கல்பட்டு - 323, வேலூர் - 191, மதுரை - 185, தஞ்சை - 181, விருதுநகர் - 179, சிவகங்கை - 176, தூத்துக்குடி - 161, நெல்லை - 161, கன்னியாகுமரி - 146, தேனி - 144, திருச்சி - 124, கோவை - 118 ராணிப்பேட்டை - 109, திண்டுக்கல் - 107,

காஞ்சிபுரம் - 97, விழுப்புரம் - 96, தென்காசி - 92, கள்ளக்குறிச்சி - 77, திருவண்ணாமலை - 72, ராமநாதபுரம் - 67, தருமபுரி - 54, சேலம் - 49, நீலகிரி - 40, கடலூர் - 34, புதுக்கோட்டை - 34, கிருஷ்ணகிரி - 33 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்ட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் 2000-க்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் பதிவாகி வந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கொரோனா வரைஸ் தொற்று எண்ணிக்கை 1,200 - 1,300 என்று குறைந்து பதிவாகி வருகிறது அதே நேரத்தில், மதுரை, தஞ்சை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Chennai Coronavirus Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: