தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 125 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ அரசு தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 135 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 70,450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 37 லட்சத்து 11 ஆயிரத்து 246 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று மட்டும் 68,444 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரை மொத்தம் 35 லட்சத்து 81 ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 6,019 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 54,019 பேர் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,754 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.