Advertisment

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: திடீர் நெஞ்சுவலி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை தீடிர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news live updates

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை திடீர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தற்போது, எயம்ஸின்  இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

Advertisment

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், டீக்கடை முதல், அனைத்து வகை கடைகளையும் திறக்க, அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, அரசுக்கு நிதி ஆலோசனை வழங்க, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் நடந்த, நீண்ட விவாதத்திற்கு பின், இதற்கான உத்தரவுகளை,முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

'கடந்த, 2019 - 20ம் ஆண்டுக்கான, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை, ரத்து செய்யும் சுற்றறிக்கை, பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். உரிமையின் அடிப்படையில், கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததை பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது.இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும், திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:51 (IST)10 May 2020

    தனிநபர் இடைவெளியுடன் பள்ளிகள் செயல்படுத்த திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறக்கப்படும் போது உயர்மட்டக் குழுவின் ஆலோசனைப்படி தனிநபர் இடைவெளியுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

    பட்டயக் கணக்காளர் தேர்வுக்காக 75 ஆயிரம் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    22:08 (IST)10 May 2020

    மே 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே அறிவிப்பு

    முதல் கட்டமாக இரு மார்க்கத்தில் 15 ரயில்கள் இயக்கப்படும் என்றும் நாளை மாலை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

    சிறப்பு ரயில்களாக கருதப்படும் ரயில்கள் டெல்லியில் இருந்து சென்னை உட்பட 15 நகரங்களுக்கு இயக்கப்படும்.

    பயணிகள் ரயில் சேவை மே 12-ஆம் தேதி முதல் படிப்படியாக தொடக்கம் - ரயில்வே அறிவிப்பு

    முதற்கட்டமாக 15 தடங்களில் 30 பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை உட்பட 15 நகரங்களுக்கு இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

    18:37 (IST)10 May 2020

    135 பேர் டிஸ்சார்ஜ்

    'தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 135 பேர் டிஸ்சார்ஜ்’

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 135 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,959 ஆக உயர்ந்துள்ளது

    - சுகாதாரத்துறை

    18:36 (IST)10 May 2020

    கொரோனா தொற்று இல்லை

    'ஈரோடு மாவட்டத்தில் 26 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை'

    ஈரோடு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 69 பேர் குணமடைந்துள்ளனர்

    18:24 (IST)10 May 2020

    669 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7,204 ஆக உயர்வு.

    சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா. சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை - 3,839

    18:01 (IST)10 May 2020

    26 பேருக்கு கொரோனா

    'மும்பை தாராவியில் மேலும் 26 பேருக்கு கொரோனா'

    மும்பை: தாராவியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    * இன்று இருவர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

    17:51 (IST)10 May 2020

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

    கன்னியாகுமரி: குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது

    * கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    17:50 (IST)10 May 2020

    தொழிலாளர்கள் போராட்டம்

    கடலூர்: நெய்வேலியில் என்.எல்.சி 2 வது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்

    * பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

    17:50 (IST)10 May 2020

    செவிலியர்கள் தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவர்

    தேர்வாகி காத்திருப்பு பட்டியலிலுள்ள செவிலியர்கள் தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவர்

    ஒருங்கிணைந்த சிகிச்சை முறையால் நாட்டிலேயே தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    17:50 (IST)10 May 2020

    இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா

    மதுரை மாவட்டம் கோரிப்பாளையம், ஊர்மெச்சிகுளம் பகுதிகளை சேர்ந்த இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

    17:19 (IST)10 May 2020

    2,520 செவிலியர்கள்...

    தமிழகத்தில் புதிதாக 2,520 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    * வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் - விஜயபாஸ்கர்

    17:18 (IST)10 May 2020

    ஆவடியில் காவலர்கள் 7 பேருக்கு கொரோனா

    ஆவடியில் காவலர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

    * தமிழகத்தில் இதுவரை காவலர்கள் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    17:18 (IST)10 May 2020

    14 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    'திருச்சியில் 14 பேர் டிஸ்சார்ஜ்- 44 பேருக்கு சிகிச்சை’

    திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இன்று 14 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    *பெரம்பலூர் - 24, திருச்சி - 13, அரியலூர் - 5, புதுக்கோட்டை - 2 பேர் என மொத்தம் 44 பேர் சிகிச்சையில் உள்ளனர்

    16:54 (IST)10 May 2020

    44 பேருக்கு சிகிச்சை

    ’திருச்சியில் 14 பேர் டிஸ்சார்ஜ்- 44 பேருக்கு சிகிச்சை’

    திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இன்று 14 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    *பெரம்பலூர் - 24, திருச்சி - 13, அரியலூர் - 5, புதுக்கோட்டை - 2 பேர் என மொத்தம் 44 பேர் சிகிச்சையில் உள்ளனர்

    16:53 (IST)10 May 2020

    மாதவரத்தில் போலீசார் இருவருக்கு கொரோனா

    சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்தில் காவலர்கள் இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    16:22 (IST)10 May 2020

    காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு

    சென்னையில் 3 இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு

    * நந்தம்பாக்கம் வர்த்தக மைய கொரோனா வார்டு, கோட்டூர்புரம் ஐஐடி வளாக வார்டு, கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பரங்கிமலை பள்ளிக்கும் சென்று ஆய்வு

    16:21 (IST)10 May 2020

    4 பேருக்கு கொரோனா

    ‘காய்கறி வியாபாரி குடும்பத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா’

    கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த வியாபாரம் செய்தவர் குடும்பத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

    * வியாபாரிக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா

    16:21 (IST)10 May 2020

    மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 970 பேர் - அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த, 962 பேர், கேரளாவை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 970 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, அவர்களுக்கு தேவையான முக கவசம், உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு 30 அரசு பேருந்து மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு ரயிலில் வந்தவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் வைத்து பரிசோதனை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    16:20 (IST)10 May 2020

    தொழிற்சாலைகள் பணி தொடங்கும்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் பணி தொடங்கும் முன் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் - அமைச்சர் நிலோபர் கபில்

    15:20 (IST)10 May 2020

    குடைகள் கொண்டு செல்ல வேண்டும்

    புதுச்சேரி மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் குடைகள் கொண்டு செல்ல வேண்டும்!

    47 நாட்களாக ஒருவர் கூட பாதிப்பு இல்லாத நிலையில், காரைக்காலில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று!

    புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்!

    14:48 (IST)10 May 2020

    முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

    அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

    பொது முடக்கம் 17ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் ஆலோசனை

    காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு

    14:40 (IST)10 May 2020

    காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்

    சென்னையில் தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்

    * சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தனி கடைகள் காலை 10 முதல் இரவு 7 மணிவரை இயங்கலாம்

    * இருசக்கர, 4 சக்கர விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் திறக்கலாம்

    14:40 (IST)10 May 2020

    பழுதுநீக்கும் கடைகள் செயல்படலாம்

    மின்சாதனப் பொருட்கள், பழுது நீக்கும் கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி

    * மொபைல் போன் விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் செயல்படலாம்

    * கணினி விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் செயல்பட அனுமதி

    * வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் தனி கடைகள் இயங்கலாம்

    14:18 (IST)10 May 2020

    நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு

    நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்

    * டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம்

    * பூ, பழம், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் செயல்படலாம் 

    கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி

    * 34 வகையான கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு

    * சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும்

    14:17 (IST)10 May 2020

    ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா

    * 35 ஆண்கள், 25 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு

    *பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் காய்கறி வியாபாரிகள் என தகவல்

    *செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 284 ஆக உயர்வு

    14:17 (IST)10 May 2020

    7 குழந்தைகளுக்கு கொரோனா

    சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகளுக்கு கொரோனா

    * பிறந்து ஒரே நாள் ஆன குழந்தை, 2 மாத குழந்தை, ஒன்றரை வயது குழந்தைக்கு தொற்று

    * 3 வயது பெண் குழந்தைகள் இருவர், 3 மற்றும் 5 வயது ஆண் குழந்தைகள் உள்பட 7 பேருக்கு பாதிப்பு

    14:17 (IST)10 May 2020

    மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை

    10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

    * தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

    13:28 (IST)10 May 2020

    ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா

    கோயம்பேடு சந்தை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 246ஆக உயர்ந்துள்ளது.

    13:07 (IST)10 May 2020

    5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு

    சென்னையில் ஒரே நாளில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    12:48 (IST)10 May 2020

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:33 (IST)10 May 2020

    அன்னையர் தினம் – ஸ்டாலின் சிறப்பு பதிவு

    உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு! எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

    இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!

    என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!

    என்று அன்னையர் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸடாலின் குறிப்பிட்டுள்ளார்.

    12:10 (IST)10 May 2020

    திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா

    திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..கோயம்பேடு சந்தையிலிருந்து வியாபாரிகள் மூலமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    11:50 (IST)10 May 2020

    சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவக ஊழியருக்கு கொரோனா

    சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள், உணவு வாங்கி சென்றவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து உணவகம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    11:23 (IST)10 May 2020

    கருஞ்சிவப்பு மண்டலங்களான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர்

    சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது.  கோடம்பாக்கத்தில் 563 ஆகவும், திரு.வி.க நகரில் பாதிப்பு 519 ஆகவும் அதிகரித்துள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலங்களாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    11:10 (IST)10 May 2020

    தாயை சிறப்பித்து சச்சின் டெண்டுல்கர் டுவிட்

    அன்னையர் தினத்தில் தாயின் சிறப்புகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    11:01 (IST)10 May 2020

    சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக பட்டியல்

    சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக பட்டியல்

    publive-image

    10:38 (IST)10 May 2020

    ரஜினி ‘பரபர’ கருத்து

    இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்று ரஜினி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    10:24 (IST)10 May 2020

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விவாதிக்கும் பொருட்டு, முதல்வர் பழனிசாமி, வரும் 12ம் தேதி, மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

    09:55 (IST)10 May 2020

    62,939 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 59,662லிருந்து 62,939ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847லிருந்து 19,358ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981லிருந்து 2,109ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிததுள்ளது.

    09:33 (IST)10 May 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள்

    கொரோனா பாதிப்பு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடையே பெரும் உயிர்ச்சேதத்தை விளைவித்துள்ளது.

    அமெரிக்கா  - 80037

    பிரிட்டன்  -31587

    இத்தாலி  - 30395

    ஸ்பெயின் - 26478

    பிரான்ஸ் - 26310

    பிரேசில் - 10656

    ஜெர்மனி - 7549

    09:24 (IST)10 May 2020

    முதன்முறையாக தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் முதன்முறையாக தூய்மைப் பணியாளர் உயிரிழந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எவ்வித அறிகுறியுமின்றி இருந்தவர் அதிகாலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரசின் தாக்கம் சிங்கப்பூரில் குறைந்து கடந்த 24 மணிநேரத்தில் 753 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் இருந்து, தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சென்றவர்களால், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, கோயம்பேடு தொற்று காரணமாக, சென்னையில், 1,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, கடலுார் மாவட்டத்தில், 317 பேர்; அரியலுார் மாவட்டத்தில், 239 பேர்; விழுப்புரம் மாவட்டத்தில், 177 பேர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 124 பேர் என, மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்தம், 2,167 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட, கோயம்பேடு மார்க்கெட் காரணமாகி உள்ளது.

    Tamilnadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment