Covid-19 News Update: இந்தியாவின் இரண்டாவது பொது முடக்க நிலை வரும் மே 3ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர். நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. tulladhநாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சை முறையும் பரிசோதனைக்குரிய சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும், இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தலாமா என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதன்
பிளாஸ்மா சிகிச்சை செயல் திறனை மதிப்பீடு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைக்கும் வரையில், ஆராய்ச்சி மற்றும் சோதனை அடிப்படையிலான தேவைகளைத் தவிர மற்ற வகையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. உண்மையில், பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
Live Blog
Coronavirus Updates: கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
நாடு முழுவதும் இன்று (ஏப்.29) பதிவான கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் விவரம்,
Tracking #COVID2019india across the country, with the number of confirmed cases and deaths state-wise at 5 pm today - 29th April #CoronaUpdatesInIndia #IndiaFightsCorona #CoronaWarriors #Covid19India pic.twitter.com/nTuJ0prlq8
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) April 29, 2020
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களுக்கு நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வங்கிக் கிளைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
மேலும், ATM மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகமூடி (Mask) அணிதல், அலுவலகங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் அவ்வப்பொழுது கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்
5. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளுக்காக தனியாக பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும்.
கொரோனா காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் அனைத்தும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 45 ஆயிரம் ஊழியர்களில் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலை காரணமாகவே சமீபத்தில் ஏற்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவு அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிதிப்பற்றாக்குறை காரணமாக விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு
எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையம் - ஒருவர், வியாசர்பாடி தீயணைப்பு நிலையம் - 2 பேர் பாதிப்பு
மூவரும் பேசின் பிரிட்ஜ் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் தங்கியுள்ளனர்
அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு
உள்ளனர்
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்?
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்?#Discharged #Districtwise pic.twitter.com/g1pJLT3lZJ
— News7 Tamil (@news7tamil) April 29, 2020
காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை
காவிரி மேலாண்மை ஆணைய நிர்வாக செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது
காவிரி நீர் ஆணையம்,முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை
-பொதுப்பணித்துறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. குன்றத்தூர் காய்கறி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா இருந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், வியாபாரியின் தாய் மற்றும் கர்ப்பிணி ஒருவர் உள்பட மொத்தம் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை 9 பேர் வீடு திரும்பிய நிலையில், 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உணவளிப்போம். தினமும் 1 லட்சம் ஏழைகளுக்கு உணவளிப்போம்.ஒன்றிணைவோம் பசியைப் போக்குவோம் என்று திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொது முடக்கத்தால் சிக்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்துவருவதாக தெரிவித்துள்ளது.வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எந்தெந்த தொழில்களையும் பணிகளையும் தொடங்கலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவாட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் மக்களின் தேவைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏ.சி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் சர்வீஸ் சென்டர்களை மட்டும் திறக்க முடியுமா என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு தமிழக அரசு மே 25ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னை மாநகராட்சியில் தனிமைப்படுத்டப்பட்ட பகுதிகளில் 1.75 லட்சம் பேர் இருகிறார்கள். சென்னையில் கொரோனா பரிசோதனையை 2000 வரை அதிகரிக்க உள்ளோம். சென்னையில் தனிமனித சமூக இடைவெளி கடைபிடிப்பதை இன்னும் கடுமையாக்க உள்ளோம். சென்னையில் விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும்” என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அதற்குப் பிறகு மேலும் 2 வாரத்துக்கு பொது முடக்கத்தை நீட்டிக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பொது முடக்கம் மே 3-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மே 2-ம் தேதி தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு,
வானிலை ஆய்வு மையம்: தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஜல்சக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில், காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல் - ஸ்டாலின் கண்டனம்
மத்திய அரசு வெளியிட்ட அரசிதழை திரும்ப பெற வேண்டும், தவறும் பட்சத்தில், மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்று சேர்த்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் - ஸ்டாலின்
உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக அரசின் சார்பில் செயல்படும் அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அம்மா உணவகம் திட்டம் தனித்துவம் மிக்கதாக செயல்படுகிறது; மொத்தம் 85 லட்சம் பேர் அம்மா உணவகம் மூலம் பயனடைகின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பில் ஏற்கனவே சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், லாக்டவுன் முடிந்தால் 10 ஆம் வகுப்பில் மீதம் இருக்கும் பாடங்களின் தேர்வுகளும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் கட்டாயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் இந்துசமயஅறநிலைத்துறை திருக்கோவில்களில் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு தலா 20கிலோ அரிசி வீதம் 517 பணியாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், கொரோனா தொற்றால் அனைவரும் விலகி இருப்போம் என கூறும் நிலையில் ஸ்டாலின் மட்டும் 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் அரசியல் ஸ்டாலின் செய்வதாக தெரிவித்தார்.
ஆரோக்யா சேது செயலியை கட்டாயம் தங்கள் மொபைல் போன்களில் அனைத்து மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் "உடனடியாக" பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது . செயலியில், 'பாதுகாப்பானது' அல்லது 'குறைந்த ஆபத்து' என்ற நிலையைக் காண்பிக்கும் போது மட்டுமே பணியாளர்கள் அலுவலகத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களை சுமுகமான முறையில் எடுத்துச் செல்வது அவசியம் என்பதால் மாநில/ யூனியன் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து, தடையின்றி நடைபெறும் வகையில், உடனடி நடவடிக்கை மிக விரைவில் எடுக்க வேண்டும் என்று நிதின் கட்காரி கேட்டுக்கொண்டுள்ளார்
கோவிட்-19 பொது முடக்கக் காலத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சல் துறையின் அலைபேசி செயலி “போஸ்ட் இன்ஃபோ” அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்திலுள்ள - இல்லங்களில் இருந்தபடியே அஞ்சல் சேவை பெறுவதற்கான அவசரத் தேவை - இணைப்பு மூலம், இந்தச் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை இடமாற்றம் செய்தால், காய்கறிகள் வீணாகி நஷ்டம் ஏற்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தை இடமாற்றத்திற்கு பதிலாக ஒரு நாள் அல்லது 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு கிருமிநாசினியை தெளிக்கலாம் என்றும் கருத்து.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தன்மீது திட்டம்போட்டு அவதூறு பரப்பியவர்கள் மீது சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் புகார் அளித்துள்ளார். குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று பிப்ரவரி மாதத்தில் கண்டறியப்பட்டதாகவும், அனால் மார்ச் மாதம் என மாற்றிக் கூறியதாகவும் மர்ம நபர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பாட்டது.
ஊரடங்கினால் வறுமையில்வாடும் மக்களுக்கு இளைஞரணி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து மாவட்ட-மாநகர் அமைப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிபொருட்களை வழங்கியுள்ள இளைஞரணி தோழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி: சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிறமாநில தொழிலாளர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
முதல்வர் பழனிசாமி: போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது. தமிழகத்தில் அந்த நிலை இல்லை என்று கூறினார்.
முதல்வர் பழனிசாமி: ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி: காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமி நாசினி அனைத்து பகுதிகளிலும் தெளிக்க வேண்டும். நகர பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை தினமும் 3 முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி: ரேஷன் கடை பொருட்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகத்தான். டோக்கன் வழங்கும் போதே அதுகுறித்த வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக,சென்னை கோயம்பேட்டில் 3,100 கடைகளில் 250 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்திருந்தது. அனுமதிக்கப்பட்டுள்ள 250
கடைகளிலும் மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும்.
சென்னை கோவை மதுரையில் நாளை மட்டும் அத்தியாவசிய கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி. மே 1ம் தேதி முதல் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு.
முதல்வர் பழனிசாமி: விவசாய விதை பொருட்களை வைப்பதற்கு கிடங்குகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். உணவு பதப்படுத்துதல், உற்பத்தி ஆலைகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி: கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தும் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 100 நாள் பணியின் போது, கூட்டம் சேராமல் சரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும். 58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், முகக்கவசம், சமூகவிலகல் கட்டயாம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்கள், விவசாய பணிகளுக்கு முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைப்பொருட்கள் கொண்டுசெல்வதை யாரும் தடுக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
முதல்வர் பழனிசாமி: தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது. கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் மே 3-ம் தேதிக்குப் பிறகு 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை சில நாட்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்திருந்தது. இந்நிலையில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி தரலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி: அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி: தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மே-3க்குப் பிறகு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் இரண்டாவது பொது முடக்க நிலை வரும் மே 3ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர். நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,400 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா வைரஸ் பாதிப்புகளை சமாளிக்கும் உடனடி தேவைகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 1.5 பில்லியன் டாலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது. நோய்க் கட்டுப்பாடு, நோய்த் தடுப்பு மற்றும் ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அளித்தல், குறிப்பாக பெண்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினருக்கு உதவிகள் அளித்தல் ஆகியவற்றுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights