Advertisment

கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசுக்கு உதவ விரும்புகிறீர்களா?

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 40 நபர்கள் ஆளாகியுள்ளனர். அவர்களில் 2 நபர்கள் முற்றிலும் குணம் அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
edappadi palanichami, corona virus, covid-19

edappadi palanichami, corona virus, covid-19

Coronavirus outbreak donate to chief minister public relief fund to save TN from COVID19 : கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் மக்களின் தினசரித் தேவைகளை பூர்த்தி செய்யும் மிகப் பெரியும் பொறுப்பில் உள்ளது அரசு. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறது.

Advertisment

இந்த கொரோனா தடுப்பு பணியை அரசு மட்டும் தனியாக எடுத்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு நிதி உதவி தர முன் வரும் நபர்கள் Indian overseas Bank-ல் இருக்கும் கணக்கு எண் 117201000000070-ல் உங்களின் நிதியை நீங்கள் அளிக்கலாம். அந்த வங்கிக்கான IFSC எண் - IOBA0001172.  இந்த வங்கிக் கணக்கில் உங்களால் இயன்ற அளவு நிதியை அளித்து, தமிழகம் கொரோனாவில் தப்பிக்க ஒத்துழைப்பை அளியுங்கள்.

மேலும் படிக்க : இக்கட்டான சூழலிலும் மனித நேயம் காட்டிய அமெரிக்கா… இந்தியாவுக்கு அளித்த நிதி எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 40 நபர்கள் ஆளாகியுள்ளனர். அவர்களில் 2 நபர்கள் முற்றிலும் குணம் அடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்த ஒரு நபர் நோயின் தீவிரத்தால் உயிரிழந்தார்.பொதுமக்கள் அனைவரும் சோசியல் டிஸ்டன்சிங்கினை பின்பற்றி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment