Advertisment

தமிழகத்தில் மொத்த நோய்த்தொற்றில் 1.59% பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா வைரஸ் தொற்று பதிவாதி உள்ளது.

author-image
WebDesk
New Update
coronaviurs daily report, tamil nadu coronaviurs daily report, covid-19 positive cases today, today coronavirus deaths rate, தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா, தமிழகத்தில் இன்று கொரோனாவால் 82 பேர் பலி, கொரோனா வைரஸ், கோவிட்-19, tamil nadu today covid-19 deaths rate, tamil nadu latest coronaviurs news, tamil nadu tested 6426 covid-19 positive, tamil nadu covid-19 deaths today 88

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதோடு மொத்த தொற்று எண்ணிக்கையில் இதுவரை 1.59% பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோன வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,34,114ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 58 அரசு கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வு மையங்கள் தனியார் ஆய்வகங்கள் 61 உள்பட மொத்தம் 119 கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களில் இன்று 58,818 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை 24 லட்சத்து 42 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 82 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,471 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த நோய்த்தொற்றில் 1.59% உயிரிழப்பு என்று சுகாதாரத்துறை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று 5,927 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாதரத்துறை செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 57,490 பேர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,117 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக, செங்கல்பட்டு - 540, திருவள்ளூர் - 382, திருநெல்வேலி - 382, காஞ்சிபுரம் - 373, விருதுநகர் - 370, தூத்துக்குடி - 316, கோவை - 289, மதுரை - 225, ராணிப்பேட்டை, தஞ்சாவூர் தலா - 182 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்று 21 பேர் உயிரிழந்தனர். மதுரையில் 9, திண்டுக்கல் 6 காஞ்சிபுரம், விருதுநகரில் தலா 5, வேலூர், திருவள்ளுர் தலா 4, நாகப்பட்டினம், சிவகங்கை தலா 3, தேனி, கோவை, கடலூர் தலா 2 பேர்கள், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என உயிரிழந்தனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா வைரஸ் தொற்று பதிவாதி உள்ளது. மேலும், சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பதிவாகி உள்ளது. அதே போல, தென் மாவட்டங்களில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Virudhunagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment