Advertisment

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 286 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படலாம் ; தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. தமிழக அரசு மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்களையும் புள்ளிவிவரங்களையும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 1,520 பேரும், கட்டாரில் இருந்து வந்த 9 பேரும், கட்டாரில் இருந்து வந்த 3 பேரும் டெல்லி, மஹாராஷ்டிரா, ஹரியான ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த 30 பேரும் அடங்குவர்.

மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 8 பேர் அடங்குவர். இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 1,149 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையை அடுத்து கொரோனா தொற்று அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 134 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 57 பேருக்கும் வேலூர் மாவட்டத்தில் 32 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 15,413 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Coronavirus Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment