Advertisment

'ஜெயலலிதா என் சகோதரி': 83 வயது கர்நாடக முதியவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

முன்னாள் முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'ஜெயலலிதா என் சகோதரி': 83 வயது கர்நாடக முதியவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

கர்நாடகாவை சேர்ந்த 83 வயது முதியவர் ஒருவர், தன்னை ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட சகோதரர் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் தலைவருமான ஜெயலலிதாவின் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர் என்று கர்நாடகாவை சேர்ந்த முதியவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

publive-image

மேலும், முன்னாள் முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட சகோதரர் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மே 29, 2020 அன்று தனது மருமகள் ஜெ.தீபா மற்றும் மருமகன் ஜெ.தீபக் ஆகியோரை தனது சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அவர் எடுத்துள்ளார்.

விண்ணப்பதாரர் என்.ஜே.வாசுதேவன், ஜெயலலிதாவின் தந்தையின் முதல் மனைவி மூலம் பிறந்து அவரது 50% சொத்துக்களில் உரிமை பெற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அவரது தரப்பில், 1950 இல் தனது தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி அவரது தாயார் தாக்கல் செய்த வழக்கை குறிப்பிட்டுள்ளார். திருமதி தீபாவுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளதாகவும் கூறிய அவர், முன்னாள் முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கக் கோரி தீபா மற்றும் தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் தன்னையும் சேர்க்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment