Advertisment

கோவை மாநகராட்சி பள்ளியில் 9 மாணவிகள் வாந்தி மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!

இந்தப் பள்ளியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

author-image
WebDesk
New Update
Covai Ramanathapuram corporation school 9 girls students ill health after taking food

கோவை ராமநாதபுரம் பெண்கள் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி பள்ளியின் பயிலும் 9 மாணவிகள் வாந்தி மயக்கம் எடுத்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

Advertisment

இந்தப் பள்ளியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மாணவிகளுக்கு காய்ச்சலா அல்லது மாணவிகள் உண்ட உணவின் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதேபோல அந்தப் பள்ளியின் எட்டாம் வகுப்பு ஏ1 பிரிவில், காய்ச்சல் கேம்ப் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் தற்போது மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென 9 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், காய்ச்சல் முகாம் அமைக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது மூன்று பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் பள்ளியில் அறிகுறிகளோடு உள்ள மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment