Advertisment

தமிழகத்தில் கொரோனாவால் 3-வது நபர் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கோரோனா வைரஸால் 3வது நபர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த மாணவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live

Tamil News Today Live: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை

தமிழகத்தில் கோரோனா வைரஸால் 3வது நபர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இதுவரை 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்க தமிழக அரசு மார்ச் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், என அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (மார்ச் 19) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இரண்டு நாட்களுக்கு முன்பு அயர்லாந்தில் உள்ள டப்னில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மார்ச் 17-ம் தேதி அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த மாணவருக்கு நேற்று கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.” என்று கூறினார்.

முன்னதாக ஸ்டேன்லி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளர், குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், அயர்லாந்தில் இருந்து வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment