Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15,000-ஐ நெருங்குகிறது: பலி எண்ணிக்கை 98

சென்னையில் இருவரும், தேனி, செங்கல்பட்டில் தலா ஒருவரும் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona in tamil nadu, கொரோனா வைரஸ், corona in karnataka, corona virus, covid-19 in tamil nadu, தமிழகத்தில் கொரோனா, தமிழக செய்திகள், corona updates india

Corona Virus Cases in Tamil Nadu Today Reports: தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753-ஆக அதிகரித்துள்ளது. அதோடு பலி எண்ணிக்கை 98 ஆக ஆதிகரித்திருக்கிறது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று(மே.22) 786 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 66 பேர், டெல்லியில் இருந்து வந்தவர்கள் 13 பேர், மேற்குவங்கத்தில் இருந்து வந்தவர்கள் 6 பேர், ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 2 பேர், குஜராத், ம.பி., ஒடிசா, தெலுங்கானாவில் இருந்து வந்த தலா ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் இருவரும், தேனி, செங்கல்பட்டில் தலா ஒருவரும் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,128 ஆனது. மொத்தமுள்ள 67 ஆய்வகங்கள் மூலமாக ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தற்போது 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

செங்கல்பட்டு - 40

சென்னை - 569

ஈரோடு - 1

கள்ளக்குறிச்சி - 1

காஞ்சிபுரம் - 13

கிருஷ்ணகிரி - 1

மதுரை - 1

புதுக்கோட்டை - 2

ராமநாதபுரம் - 7

ராணிப்பேட்டை - 1

தேனி - 4

திருவள்ளூர் - 39

திருவண்ணாமலை - 2

தூத்துக்குடி - 6

திருநெல்வேலி - 1

திருச்சி - 4

வேலூர் - 2

மொத்தம் - 694

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை மொத்தம் - 91

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி முதல்கட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் (விமான நிலைய தனிமைப்படுத்தல்):-

பிலிப்பைன்சில் இருந்து திரும்பியவர்கள் - 1

இதன் அடிப்படையில் (694+91+1) தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment