Advertisment

உருவானது ஃபனி புயல்! அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் என்ன நடக்கும்? சென்னை வானிலை மையம் விளக்கம்.

ஏப் 30, மே 1ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai weather forecast

chennai weather forecast

Tamil Nadu Weather : தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான அதிவேக காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபனி புயலாக உருமாறியுள்ளது.

Advertisment

சித்திரை மாதத்தில் புயலா? இது என்ன கட்டுக்கதையா இருக்கு என கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் நக்கல் அடித்துக் கொண்டிருந்தவர்கள் கவனத்திற்கு. வங்கக்கடலில் அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அதிக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது.

இந்த புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களை ஒரு காட்டு காட்டி சென்ற கஜா புயலை விட ஃபனி புயலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தற்போது வங்கடலில் ஃபனி புயல் உருவாகி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் பகிருங்கள்.. புயலின் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!

இதுக் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், ஃபனி புயல் நாளை அதிவேக புயலாக உருவெடுக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

Fani Cyclone பயணிக்கும் பாதை தெரியுமா?

இந்தப் புயல் படிப்படியாக நகர்ந்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் கரையைக் கடக்கும். இதனால் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்லி மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

இது வங்கக்கடலில் உருவான புயல் என்பதால் அதற்கு ஃபனி என்று அவர்களே பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த புயல் நாளை அதி தீவிர புயலாக வலுப்பெறும். 29-ம் தேதி வடதமிழகம் தெற்கு ஆந்திரப் பகுதி நோக்கி நகரக்கூடும். மேலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஏப் 30, மே 1ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும்.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவானது ஃபனி புயல்!

மீனவர்கள் 27, 28 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு பகுதிகளுக்கும், 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தென்மேற்கு பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் புயல் காரணமாக 29, 30 ஆகிய தேதிகளில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றத்துடனும் காணப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment