தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 97பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,500ஐ தாண்டியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறை தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
இன்று புதிய கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனை விவரம்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 139 கொரோன வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 70,127 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 42 லட்சத்து 6 ஆயிரத்து 617 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 68,111 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 40 லட்சத்து 63 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,517ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை:
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,047 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 237ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53,541 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதிய தொற்று எண்ணிகையைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்:
மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட கொரோனா வைரஸ் புள்ளிவிவரத்தின்படி, இன்று மாநிலத்தில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையான 5,975ஐவிட கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 6,047 பேர் என்ற எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
மாவட்ட வாரியாக தொற்று விவரம்:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் 392 பேருக்கும், கடலூர் - 380, திருவள்ளூர் மாவட்டத்தில் - 354, செங்கல்பட்டு - 352, சேலம் - 261, காஞ்சிபுரம் -222, கன்னியாகுமரி - 181, வேலூர் - 180, திண்டுக்கல் - 178, தேனி - 170, விழுப்புரம் - 160, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தலா - 155, திருநெல்வேலி - 158, தென்காசி - 140 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,677 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று சமீபத்தில் சில நாட்களாக மேலாக தினசரி தொற்று 1,200க்குள் பதிவாகி வந்த நிலையில் இன்று 1,298 பதிவாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.