Advertisment

தமிழகத்தில் ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 8,500ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோன பாதிப்பால் 68 பேர் உயிரிழந்ததையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 8,502 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
corona cases in tamilnadu

tamil nadu daily coronavirus report

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோன பாதிப்பால் 68 பேர் உயிரிழந்ததையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 8,502 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் 8ம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஷாப்பிங் மால்கள் திறப்பது, பேருந்துகள் இயக்கம், ரயில் சேவைகள் தொடங்குவது போன்ற புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்றொரு புறம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

பரிசோதனை விவரம்:

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 170 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (அரசு பரிசோதனை மையம் 65, தனியார் 105) இன்று 80,623 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 60 லட்சத்து 48 ஆயிரத்து 832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 78,711பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 58 லட்சத்து 58 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகள்:

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) ஒரே நாளில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,502 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்:

அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,735 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 46,806 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் - 485 பேருக்கும், செங்கல்பட்டு - 324, சேலம் - 291, திருவள்ளூர் - 283, கடலூர் - 268,  காஞ்சிபுரம் - 198, திருவண்ணாமலை - 189, என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,708தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று கடந்த ஒரு மாதமாக 1000க்குள் பதிவாகி வருகிறது. ஆனால், சென்னைக்கு வெளியே அதிக அளவில் மாறி மாறி பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கோவை, சேலம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. மேலும், இன்று கொரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டதைவிட குணமடைந்தோர் என்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment