Advertisment

ஓய்வுபெற்ற அதிகாரி திலகவதி மீது மருமகள் புகார்

உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி மகன் மீது மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஓய்வுபெற்ற அதிகாரி திலகவதி மீது மருமகள் புகார்

உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி மகன் மீது மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisment

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி மகன்  பிரபு திலக். இந்நிலையில் இவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி அவரது தந்தையுடன்  சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார்  கொடுத்தார்.

 இதில் தனது கணவன் திருமணத்திற்கு அப்பால் உறவில் இருப்பதாகவும். இதை எதிர்த்து கேட்டதற்கு தனது தாய் காவல்துறை அதிகாரி என்பதை குறிப்பிட்டு மிரட்டுவதாகவும் அவர் கூறினார். மேலும் இவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் திருமணத்திற்காக ஒரு கோடி பணமும் 170 சவரன் நகைகளும் அவரது தந்தை வழங்கியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாநாகர காவல் ஆணையாளர் சமந்தப்பட்ட  காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment