Advertisment

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை பெய்யுமா?

காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணிநேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை பெய்யுமா?

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை கடந்து வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது.

Advertisment

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணிநேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் அடுத்த மூன்று நாள்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்துக்கு நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Weather Cyclone Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment