தேர்தலுக்குப் பின்னர் வைகோ மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட்டாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அழகிரியின் மகன் தயா அழகிரி.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி, திமுக.,வை அவ்வப்போது தாக்கிப் பேசி வருவது வாடிக்கை. குறிப்பாக, திமுக தலைமையையும் அவர் விமர்சித்து கருத்து தெரிவித்து வருவதுண்டு. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அழகிரி, 'எதிர்வரும் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை ஒரு வாரத்தில் அறிவிப்பேன்' என்றார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வைகோவை குறியீடு போட்டு கிண்டல் செய்திருக்கிறார் அழகிரியின் மகன் தயா அழகிரி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த இந்த அரசியல்வாதி கோபால்சாமி, தேர்தலுக்குப் பின் மதிமுகவை திமுகவுடன் இணைத்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை" எனப் பதிவிட்டிருக்கிறார்.
March 2019Don’t be surprised if the most credible politician ???? of TN, Gopalsamy merges his party MDMK with the DMK after the polls .. #Vaiko
???? ⬅️ ????
— Dhaya Alagiri (@dhayaalagiri)
Don’t be surprised if the most credible politician ???? of TN, Gopalsamy merges his party MDMK with the DMK after the polls .. #Vaiko
— Dhaya Alagiri (@dhayaalagiri) March 18, 2019
???? ⬅️ ????
அந்த ட்வீட்டின் கீழே ஒரு வீடு அதை நோக்கி ஒரு அம்புக்குறி அந்தப் பாதையில் ஓர் ஆமை என்று குறியீடும் போட்டிருக்கிறார். 'ஆமை புகுந்த வீடு விளங்காது' என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அதைப் போன்று, வைகோவை குறிப்பிட்டு தயா அழகிரி ட்வீட் செய்திருக்கிறார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - Election 2019 Live Updates: தமிழக தேர்தல் களம் லைவ் அப்டேட்ஸ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.