Advertisment

நீட் தேர்வுக்கு பயந்து ஸ்ரீமதி தற்கொலையா? திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை

கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்தார் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
நீட் தேர்வுக்கு பயந்து ஸ்ரீமதி தற்கொலையா? திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை

கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்தார் என்று திண்டுக்கல்  சீனிவாசன் பேசியிருப்பது சர்சையை ஏற்படுத்தி உள்ளது.  

Advertisment



கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இதனிடையே, கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவின் பெயரில் மாணவியின் உடலை பெற்றோர்கள்  வாங்க சமதம் தெரிவித்தனர்.  இந்நிலையில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு எதிராக அதிமுக நடத்திய போராட்டத்தில் இவ்வாறு அவர் மேடையில் பேசினார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, தான் அப்படி கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment