ஹோட்டலில் சாப்பாடு பார்சல் வாங்க டிபன் பாக்ஸ் கொண்டுவருவோர்க்கு 5% விலைக் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஹோட்டம் சங்கம் :
தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேரியர் சாப்பாடு வழக்கம் மீண்டும் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? முன்பெல்லாம் எடுப்பு சாப்பாடு என்று அழைக்கப்படும் கேரியர் சாப்பாடு ஒரு கூடையில் வரும்.
அந்த சாப்பாட்டை போடு சாப்பிடுவதற்கு வாழை இலையும் அனுப்பப்படும்.சில இடங்களில் அந்த சாப்பாட்டை எடுத்து வருபவர்களே பரிமாறி விட்டு, காலி கேரியரை திரும்பி எடுத்து செல்வார்கள்.
இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கேரியர் டிப்பன் பாக்ஸ் ஆகி, டிப்பன் பாக்ஸ் பார்சலாக மாறி கடைசியில் பார்சல் யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிகாக உருமாறியது.
சாப்பாட்டை ஆர்டர் செய்தால் அது பிளாஸ்டிக் டப்பாவில் வரும். அதை சாப்பிட்டு விட்டு குப்பையில் எறிந்து விட்டு செல்லலாம். இது தான் இப்போது கரண்டில் ஓடிக் கொண்டிருக்கும் பழக்கம். இது ஆரோக்கியமான வழிமுறையா என்றால் கட்டாயம் இல்லை.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சமீப காலமாக பிளாஸ்கிக் கைப்பைகள் கூட தூக்கி எறியப்பட்டு சாக்கு பைகள், மூங்கில் பைகள், துணை பைகள் ஆகியவை அழகாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பைகளில் இருக்கும் இந்த மாற்றம், உண்ணும் உணவில் வருவது தவறில்லை. அதை வழிமுறைப்படுத்த தான் தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது,. ஹோட்டலில்களில் பார்சல் சாப்பாடு வாங்க வருவோர்கள், கையில் டிப்பன் பாக்ஸ், கேரியர் ஆகியவற்றை கொண்டு வந்து வாங்கினால் அவர்களுக்கு சாப்பாடு பில்லில் 5 சதவீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டி ஒழிப்பை கருத்தில் கொண்டு ஹோட்டல் சங்கம் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்தப்படியே ஆர்டர் செய்யும் மக்களுக்கு பிளாஸ்டிக் இல்லாமல் கேரியரில் டெலிவரி செய்யவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.