Advertisment

தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை : முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

புகார் தொடர்பாக காவல்துறை விசாரிக்க வேண்டும். விசாரணையில் முகந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijayendra sarasvathi

தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக விஜயேந்திரர் மீது புகார் குறித்து விசாரணை செய்து முகந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஜனவரி 23 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் தந்தை எழுதிய புத்தகமான தமிழ் - சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி தொடக்கத்தில் இசைக்கப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் விஜயேந்திரர் தியானத்தில் இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக விஜேயந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் துணை தலைவரும் வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி சென்னை எஸ்பிளானேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை செய்யவில்லை. எனவே தான் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி துரைசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவில், அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை இசைக்க வேண்டும் என தமிழக அரசு 1979 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், விஜேயந்திரர் எழுந்து நிற்காமல் வேண்டுமென்றே அவமதித்துள்ளார். எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயந்திரர் மிதான புகாரை எஸ்பேளனட் காவல்நிலையத்தில் இருந்து ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றபட்டுள்ளதாக தெரிவித்தார்.

விஜயந்திரர் தரப்பும் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும், விசாரணையில் குற்றச்சாட்டு தொடர்பான முகந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Chennai High Court Vijayendara Sarasvathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment