Advertisment

தீபாவளி பண்டிகை: களைகட்டிய கோவை

வான்விளக்கு வான வேடிக்கை இசைக்கச்சேரி என கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.

author-image
WebDesk
New Update
தீபாவளி பண்டிகை: களைகட்டிய கோவை

வான்விளக்கு வான வேடிக்கை இசைக்கச்சேரி என கோவை  மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.  

Advertisment

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் கோவை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் வான் விளக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீனா தைவான் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே அதிக அளவில் கொண்டாடப்படும் இந்த வான்விளக்கு விடும் நிகழ்ச்சி கோவை மாவட்டத்தில் முதல்முறையாக நடத்தப்பட்டது.

publive-image

இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை காண  ஆயிரக்கணக்கான மக்கள் வாலாங்குளத்தில் குவிந்தனர். வான் விலக்கு விடும் நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், உள்ளிட்ட நகரின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

publive-image

அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் முன்பதிவு செய்து குளக்கரையில் இருந்து வானில் பறக்க விட்டனர். சுமார் 200"க்கும் மேற்பட்ட வான்விலக்குகள் பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment